வாயு ரைபிளில் சுட்டு வைத்தியருக்கு விளக்கமறியல்




பாடசாலை மாணவனொருவரை வாயு ரைபிளால் சுட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வைத்தியரை டிசெம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய- எரவ்வல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 17 வயதான மாணவனொருவன் எறிந்த பந்து, அருகிலிருந்த தோட்டமொன்றுக்குச் சென்றதால், அதை எடுக்கச் சென்ற அம்மாணவனை நோக்கி குறித்த வைத்தியர் வாயு ரைபிளில் சுட்டுள்ளார்.

இதில் காயமடைந்த குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்