STF படையினருக்கு கொரோனா பலர் தனிமைப்படுத்தளில்.





நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 275 பேரில் 23 பொலிஸ் விசேட படையினர் உள்ளடங்குவதாக, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 39 பொலிஸாருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு 1-15 வரையான பிரதேசங்களிலிருந்து 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் 9 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் கம்பஹா மாவட்;டத்தில் 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்