பௌத்த தேரரின் உடலை சுமந்து சென்ற முஸ்லிம்கள் சிங்கள சமூகத்தில் குவியும் பாராட்டுக்கள்.


திருகோணமலையில், அரிசிமலை ஆரன்ய சேனாசன பிரிவிற்குரிய யான்ஓய ரஜமகா விகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரர் அண்மையில் இறைபதம் அடைந்ததுடன், அவரது இறுதிக்கிரியைகள் நேற்று அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரரின் வழிகாட்டுதலின் கீழ் இறுதி மரியாதையுடன் நடைபெற்றது.
இறுதிக்கிரிகைகளில் புல்மோட்டை பிரதேச முஸ்லிம் உலமாக்கள், பொதுமக்கள், தமிழ் சகோதரர்கள் இறுதிக்கிரியைகள் நிறைவுபெறும் வரை கலந்து கொண்டதுடன், முஸ்லிம் உலமாக்கள் தேரரின் உடல் தாங்கிய பேழையை தகனம் செய்யும் இடத்திற்கு சுமந்து சென்றமை அனைவர் மத்தியிலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அண்மையில் புல்மோட்டை பிரதேசத்தில் காலமான உலமா ஒருவரின் இறுதிக்கிரியைகளில் அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரர் தலைமையிலான தேரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்