ஜனாஸாக்களை பலாத்காரமாக தகனம் செய்வது வேதனைக்குரியது - இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கவலை.



இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் கட்டாய தகனங்கள் குறித்து, உலகளாவிய முஸ்லிம் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தகனம் செய்ய இலங்கை அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக வெளியான தகவல்கள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய கட்டளைகளுக்கு முரணான இந்த நடைமுறைக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது

இஸ்லாமியர்களின் நம்பிக்கையில் உள்ள அடக்கம் செய்யப்படும் சடங்கை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கோரியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்