பொத்துவில் கல்வி வலயம்; முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏமாற்றப்பட்டார்களா பொத்துவில் மக்கள்.?



இன்றைய பாராளுமன்ற அமர்வில் (8/12) கேள்வி பதில் நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களின் பொத்துவில் கல்வி வலயம் குறித்த கேள்விகளுக்கான பதிலினை கௌரவ கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் அளித்தார். 

இதன்போது மேலும் குறிக்கீட்டு கேள்விகளையும் கௌரவ பா.உ. முஷாரப் தொடுத்தார்.


இதுவரை காலமும் ‘உப கல்வி வலயம்’ என்ற பெயரில் இதுவரை இருந்த அரசியல்வாதிகள் விழாவெடுத்து மக்களை ஏமாற்றி கல்விக்கு பெரும் துரோகமிழைத்திருக்கின்றனர் என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்தது. 


பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்திற்கான அவசியத்தினை நேரடியாக கல்வியமைச்சரின் கவனித்திற்கு இன்று பா.உ. முஷாரப் கொண்டுவந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்