மேலும் நால்வர் மரண பட்டியல் 208 ஆக உயர்வு




இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் தொகை 208 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் நால்வரின் மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.




கொழும்பு 14, தர்காநகர், அகலவத்த மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களின் மரணங்களே இவ்வாறு இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.




தொடர்ந்தும் 7260 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்