நெருக்கடியே மோதலுக்கு பிரதான காரணம் வெளியானது.



மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பான முறையான விசாரணையை மேற்கொள்வதற்காக, நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்;ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கையில் மூன்று விடயங்களின் கீழ் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பில் மேற்படி பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நெருக்கடி நிலையே மோதலுக்கு காரணம் எனவும் குறித்த குழு அமைச்சரவையில் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 40 பேரிடம் இக்குழு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்