ஜனாஸா; WHOவின் நிலைப்பாடே சரியானது: மைத்ரி



இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டாய ஜனாஸா எரிப்பு தவறு எனவும் உலக சுகாதார அமைப்பின் நிலைப்பாடே சரியானது எனவும் 'குரல்' கொடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


இந்தியாவின் ஹிந்து பத்திரிகையுடனான நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இலங்கையிலும் கொரோனா உடலங்களை அடக்குவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்