ஜனாஸா எரிப்பு விடையத்தில் வெட்டிப்பேச்சுக்கள் மூலம் எதுவுமே நடைபெறப்போவதில்லை! - ஹாபிஸ் நசீர் எம் பி

 


ஜனாஸாக்களை அடக்கும் விவகாரத்தில் சமூகத்துக்கு வெற்றி கிடைக்குமெனவும் இறைவனின் துணையினால் இதற்கான அனுமதி விரைவில் வருமெனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


“வெட்டிப்பேச்சுக்கள் மூலம் எதுவுமே நடை பெறப்போவதில்லை. அத்துடன் இவர்களின் விமர்சனங்களுக்கும் தூற்றல்களுக்கும் பயந்து இந்தப் பணியை நிறுத்தப் போவதுமில்லை.” எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் முஸ்லிம்களின் விவகாரங்களை எவ்வாறு கையாள வேண்டுமென விளக்கமில்லாதவர்களே பொதுவெளியில் வீண் குழப்பங்களை உருவாக்குகின்றனர்.


எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொண்டு இந்த விடயத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.


ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் எமது அரசியல் காய்நகர்த்தல்களை நாம் நிறுத்தப்போவதில்லை இறைவனின் துணையுடன் அடக்கியே தீருவோம். அத்துடன் வீண்பழி சுமத்தியவர்களின் வாய்களும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்