முஸ்லீம் சமூகத்திற்கு உடல்களை புதைப்பதற்கு உள்ள உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்- ஜெனீவாவில் OIC அமைப்பு....!!!

 

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.


முஸ்லீம் சமூகத்திற்கு உடல்களை புதைப்பதற்கு உள்ள உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் என இஸ்லாமியஒத்துழைப்பு அமைப்பு  OIC வேண்டுகோள் விடுத்துள்ளது.


இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம்  Yousef Al Othaimeen, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்


ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 அமர்வின் உயர்மட்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெறாத நாடுகளில் முஸ்லீம் மக்களின் நிலைமையை அவதானிப்பதில் ஆர்வமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த அடிப்படையில் இஸ்லாமிய விதிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இலங்கையில் முஸ்லீம்களிற்கு அனுமதி மறுக்கப்படுவதால் இலங்கையில் முஸ்லீம்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்