55 ஆயிரம் லீட்டர் தேங்காய் எண்ணெயுடன் 2 பௌசர்களின் சாரதிகள் பொலிசாரால் கைது.


 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் 2 பௌசர்களின் சாரதிகள் ( மொத்தமாக 55 ஆயிரம் லீட்டர்)  தங்கோவிட்டவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


மனித பாவனைக்கு உதவாத விஷப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெயே அவ்விரு பௌசர்களிலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தரமற்ற,  மறு ஏற்றுமதிக்கு அறிவிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயின் ஒரு பகுதியா இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதா என்பது   குறித்து  விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்