’அறிக்கை முழுமையானதல்ல’ கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு.




ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நாட்டுக்கு அறியக்கிடைத்திருப்பர் என எதிர்பார்த்திருந்த போதிலும், அது அவ்வாறு நடக்கவில்லை என்பதானது, தற்போது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

'கறுப்பு ஞாயிறு' தின எதிர்ப்பில் பங்கேற்றிருந்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த அவர், ஆணைக்குழு அறிக்கை முழுமையானதல்ல எனவும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பதையும் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்