பண்டிகை காலத்தில் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வரவிருக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டை குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும் என சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டு பருவத்தில் கடைகளுக்குச் செல்லும்போது கடை உரிமையாளர்களும்பொதுமக்களும் சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை குறிப்பிட்டார்.

0 கருத்துகள்