மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) கல்முனையில் இடம்பெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் - தடை உத்தரவை மீறி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்தோரை இராணுவத்தினர் கலைத்தனர். இன்னும் சிலர் கட்டாய Antigen பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது - மாவடிப்பள்ளியில் , குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்