கொ​ரோனா பீதியால் பாராளுமன்ற சபாநாயகர் காரியாலயம் மூடப்பட்டது..!


கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், பணியாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில், சபாநாயகரின் காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.


அத்துடன் அந்த காரியாலயத்தில் பணியாற்றிய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் ,முன்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சபாநாயகர் அந்தக் காரியாலயத்துக்கு வருகைதருவதை தவிர்த்துவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்