கொரோனா வைரஸை ஆயுதமாகப் பயன்படுத்தி மூன்றாம் உலகப்போருக்கு சீனா திட்டம்?

 


கொரோனா பேரிடர் பரவியதற்கு முன்பாகவே சீனா, கொரோனா வைரஸை ஆயுதமாகப் பயன்படுத்தி மூன்றாம் உலகப்போருக்கு திட்டமிட்டதாக அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கும் சீன ராணுவத்தின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி ,புதிய யுகத்தின் ஆயுதமாக தொற்று நோய்க்கிருமிகளை ஏவ சீனாவின் ராணுவ விஞ்ஞானிகள் திட்டமிட்டதாகவும் அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும் தற்போது கிடைத்துள்ள ஆவணங்கள் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.


அதற்கமைய ,இந்த புதிய ஆவணங்கள் காரணமாக, மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று தோன்றியது எப்படி என்பதற்கான கேள்விகள் எழுகின்றன.


மேலும் ,சீனா கொரோனா பற்றிய உண்மையான விவரங்களை மறைப்பதாகவும் அமெரிக்கா மற்றும் ஆசியா நடத்திய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்