
சிறுவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்து, அவதானமாக இருக்குமாறு பொரலை லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த காய்ச்சலானது 5 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு கண், நாக்கு, தோல் சிவத்தல், மூட்டு வலி, மூட்டு வீக்கம் அல்லது சருமத்தில் தோல் அழற்சி போன்ற அறிகுறிகள் காணப்படுவதுடன், 2 வாரங்களுக்கு மேல் காய்ச்சல் இருக்குமாயின் கண்டிப்பாக வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் சிறுநீரகம், மூளை, இதயம் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்