கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் மேலும் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். 


இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 241,787 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 207,287 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்