புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ரபீக் நியமனம்


புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று (01) தெரிவு செய்யப்பட்டார். 


புத்தளம் நகர சபையின் தலைவராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்து ஒன்றில் உயிரிழந்தமையை அடுத்து, புத்தளம் நகர சபையின் உபதலைவரான சுஷாந்த புஷ்பகுமார ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பதில் தலைவராக செயற்பட்டு வந்தார். 


இந்த நிலையில் புத்தளம் நகர சபையில் ஏற்பட்ட தலைவர் பதவி வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான தெரிவு இன்று (01) காலை 10.30 மணிக்கு சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்