ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைப்பு!



ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அவரிடம் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்