தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில்களை உருவாக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவேன். -

ADMIN
0

 

‘பெருநகரப் பல்கலைக்கழகங்கள்’ - க.பொ.த. உ/த சித்தியடைந்தும் உயர் கல்வி வாய்ப்பை பெறாதவர்களுக்காக:


தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில்களை உருவாக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவேன்.


எனது "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்தின் மற்றுமோர் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில்,


பெருநகரப் பல்கலைக்கழக - City University - திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதன் முதலாவது பல்கலைக்கழகம், கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவல பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.


அடுத்த சில வாரங்களில், அதற்கான பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும் வகையில் -


அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.cu.ac.lk ,


“2021 - உலக இளைஞர் திறன் தினம்” கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


புதிய தொழில்நுட்பத்தின் மூலம், தொழில் சந்தையை இலக்காகக் கொண்டட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.


க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள், பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்றனர்.


அவர்களில், பொருளாதார ரீதியாக வசதியுள்ள மாணவர்கள், தனியார் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்கிறார்கள்.


உயர்தரத்தில் சித்தி பெற்றும், ஆனால் பொருளாதார ரீதியாக வசதியில்லாத திறமையான மாணவர்களுக்கு, தொழில் சந்தைக்கு ஏற்ற பட்டப்படிப்பினை வழங்குவதையே, இந்தப் பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம் எனது எதிர்பார்ப்பாகும். 


ஒவ்வொரு மாவட்டத்துக்கும் - தனித்துவமான, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தொழில் சந்தைக்குப் பொருத்தமான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பட்டப்படிப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.


பட்டப்படிப்பின் நிறைவில், அறிவு மற்றும் தொழிற்றிறன் நிறைந்த எதிர்காலப் பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக - திறன் விருத்தி, தொழிற்கல்வி மற்றும் புத்தாக்கத்துறை இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.


இளைஞர்களின் வேலைவாய்ப்பு இன்மையானது, 2014இல் 4 சதவீதமாகக் குறைவடைந்த போதும், 2019ஆம் ஆண்டில் அது, 16 சதவீதமாக உய

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default