மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் சுமார் 50 நாட்டுகளுக்கு பின் இன்று (01) முதல் சுகாதார பொறிமுறைகளுக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மே மாதம் 11 திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த பயணக்கட்டுப்பாடு மே 30 வரை மீண்டும் நீடிக்கப்பட்டு பல தடைவைகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
இந்நிலையில் அரசாங்கம் தற்போது அரச ஊழியர்களை வழமைப்போல் பணிக்கு அழைத்துள்ளது.
இந்நிலையில் நெரிசல் நிலையினை குறைப்பதற்காக நாடளாவிய ரீதியில் பஸ் மற்றும் புகையிரத சேவை 75 சதவீத பயணிகளுடன் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்