நிக்கவெரட்டிய, கந்தேகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (26) பிற்பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கேஸ் சிலிண்டர் வெடிப்பு என சந்தேகிக்கப்படுவதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
உரிமையாளரும் அவரது மனைவியும் வயலுக்குச் சென்றிருந்ததாலும், மூத்த பிள்ளை பாடசாலைக்கு சென்றதாலும், இளைய பிள்ளை உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாலும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
வீட்டு எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு அல்லது வேறு காரணங்களால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வாயு வெடிப்பு சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
நவம்பரில் மாத்திரம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
0 கருத்துகள்