இந்தியாவிற்கு செல்லும் பஷில் ; ஒரு பில்லியன் டொலரை பெற முயற்சி



கடன் அடிப்படையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ எதிர்வரும் மாதம் இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சர், இந்திய பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, இந்திய முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் நிதி அமைச்சர் முன்னெடுப்பார் என கூறப்படுகின்றது.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் அண்மையில் உறுதிப்படுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்