ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரிக்கை




விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து உத்தியோகபூர்வமாக விமான சேவை நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருளுக்கான டொலரை வழங்குவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்