இலங்கைக்கு லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு தொகையை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு தொகையிலுள்ள இரசாயண பதார்த்தமான “எதில் மெர்கெப்டன்” (ethyl mercaptan) குறிப்பிட்டளவு இல்லாமையினாலேயே, இந்த எரிவாயு தொகை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இறுதித் தீர்மானத்தை தொழில்நுட்ப குழு இன்று காலை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்