அடுத்த சில நாட்களுக்கு நாடளாவிய ரீதியில்
குறுகிய கால மின்சார தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
"நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மூன்று ஆலைகள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும்" என CEB அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் ஆலைக்கு மீள் சக்தியூட்ட இன்னும் இரண்டு நாட்களாவது தேவைப்படும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.