VIDEO: கூறியதை போலவே முருத்தேட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பல்கலைக்கழக மாணவர்கள்!




கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தேட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பட்டமளிப்பு விழாவில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.






முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சான்றிதழைப் பெற சிலர் மறுத்த நிலையில், பல மாணவர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.




முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) இன்றைய நிகழ்வைப் புறக்கணித்தது.




கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்