கொரோனா தொற்றால் மேலும் 16 பேர் உயிரிழப்பு!






கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,995 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 231 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,725 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 587,245 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்