Headlines
Loading...
ஆசிரியர்களின் கொடுப்பனவில் பிரச்சினை!

ஆசிரியர்களின் கொடுப்பனவில் பிரச்சினை!

 




2021 உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி ,இது குறித்து ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், ஆசிரியர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை இந்த ஆண்டும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கொடுப்பனவு அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.


மேலும் ,இந்த முடிவை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்ததாக கூறிய ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

0 Comments: