![நாளை 10 மணிநேரம் மின்வெட்டு!](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHsFztQcJRRpC5j7Lg57LxP-19k5lxD7pwmBUAmsY4kAOkOd5E-h_C_wwLD1Tx104Sdr0deksRRN48eabcNxKtJgMf2bHZ2VkMisHC9ncNd_oElp4QNix-nDCbagvW8uSfw-urooY9x1fcCV8n84YUZjYdQB1TKPEMWEs3VHW7wUFPuVYFVD__iQ/w700/2-Recovered%20copy.jpg)
நாளை 10 மணிநேரம் மின்வெட்டு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHsFztQcJRRpC5j7Lg57LxP-19k5lxD7pwmBUAmsY4kAOkOd5E-h_C_wwLD1Tx104Sdr0deksRRN48eabcNxKtJgMf2bHZ2VkMisHC9ncNd_oElp4QNix-nDCbagvW8uSfw-urooY9x1fcCV8n84YUZjYdQB1TKPEMWEs3VHW7wUFPuVYFVD__iQ/w640-h640/2-Recovered%20copy.jpg)
நாட்டில் நாளை (30) 10 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலமும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments: