Headlines
Loading...
கருக்கலைப்பு தொடர்பாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளோம் - நீதி அமைச்சர் அலிசப்ரி

கருக்கலைப்பு தொடர்பாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளோம் - நீதி அமைச்சர் அலிசப்ரி




கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளோம்“ என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.






நாடாளுமன்றத்தில் இன்று (08) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையில், பலாத்காரமாக துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் பெண்ணின் கருவறையில் உருவாகும் கருவை இல்லாமலாக்குவது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சினை இருந்து வருகின்றது.


இது மிகவும் கவலைக்குரிய பிரச்சினையாகும். ஏனெனில் இந்த நிலைக்கு ஆளாகும் பெண், பல்வேறு அசெளகரியங்கள் மற்றும் சமூகத்தில் தாழ்த்தப்படும் நிலை உருவாகுவதுடன் பிறக்கும் குழந்தையும் காலம்பூராக சமூகத்தில் இழிவுபடுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றார்.


இதன்போது பதிலளிக்கையில் நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 Comments: