![பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKynhRnu9sZNMPX9aSoPK11qY7oHBwdrGVuxiLNyZbUDZZf7oDDQGZ4BUKFFjXV6YaHcQ5Ia_e3jUYX69SVPapkPSrhOyICxGQx8yjy5wQXZNOz-O0ejtJavgGmdWl7S8PCENNc6Y35QFMf96Cxcd8gh1HiO89QQEHdAngOiLL8EGdpcSwE8zjU_9iiw/w700/PARLIMENT-pearl-one-news-1.webp)
பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKynhRnu9sZNMPX9aSoPK11qY7oHBwdrGVuxiLNyZbUDZZf7oDDQGZ4BUKFFjXV6YaHcQ5Ia_e3jUYX69SVPapkPSrhOyICxGQx8yjy5wQXZNOz-O0ejtJavgGmdWl7S8PCENNc6Y35QFMf96Cxcd8gh1HiO89QQEHdAngOiLL8EGdpcSwE8zjU_9iiw/w640-h344/PARLIMENT-pearl-one-news-1.webp)
சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.
இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.
இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments: