நாளையும் ஏழரை மணித்தியால மின்வெட்டு


நாளைய தினமும்(04) ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி, காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை 05 மணித்தியாலங்களும் மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்