![எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது- கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji9-TLAzQvEjDmCGKLT2XiW3iCq8-EhFSrSiecunfe_qUIbzRXHhDLizfDm2pmKcaxZxaVxBHrd_ii_qISMk1XAfNhDDCqKbMuM1wRQZi760R5XYNVr8Dgy84RYpsNvUBuc9c0grcgCxS1oklHRJdBZdVHn_W1EFH5SNFAwR6GvwUzxZmIRuYkhg/w700/IMG-20220323-WA0034.jpg)
எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது- கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம்
எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தொழில்துறைக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்தால் எதிர்காலத்தில் சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
/chat.whatsapp.com/Fq4TfCPtVKE5nGJCKsOvF8
0 Comments: