மரக்கறி விநியோகத்திற்கு தடை?

 


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் முழு அடைப்பு போராட்டம் நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில், கையிருப்பிலுள்ள மரக்கறிகளை 28ஆம் திகதி அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.


மேலும் குறித்த தீர்மானம்,கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

Tags