அலஸ்காவில் 10 பேருடன் பயணித்த விமானம் மாயம் – தேடுதல் பணி தீவிரம்..!

NEWS
0 minute read
0


அலாஸ்காவில் 10 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும் சிறிய ரக விமானம் 10 பேருடன் புறப்பட்டு சென்றது.

புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.

இதனைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பொதுப் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


Post a Comment

0 Comments

Post a Comment (0)