இலஞ்சம் பெற்ற அதிபருக்கு விளக்கமறியல்

Ceylon Muslim
0 minute read
முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பிப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் அதிபர் ஒருவரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான அதிபர் காலி, அக்மீமன பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
To Top