வில்பத்து விவகாரம்; 25ம் நாள் தொடரும் மக்கள் புரட்சி



வில்பத்து  சரணாலயம் தொடர்பாக வெளியீடு  செய்யப்பட்ட அரச வர்த்த  மானியை இரத்து செய்யக்கோரி 25ம்  நாளாகவும்  ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

இவ் ஆர்ப்பாட்டமானது உலகளாவிய ரீதியில் பேசப்படும் விடயமாக  மாறி வரும் இத்  தருணத்தில் இலங்கை அரசாங்கம் பாராமுகமாக இருப்பது நல்லாட்சியை சந்தேகிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம்  ஏற்படும் நிலை உருவாகும் எனவும் நல்லாட்சியை உருவாக்கிய சிறுபான்மையின மக்களின் நிலை இன்று கேள்விக்குறியாக இருக்கின்றது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

 அதுமட்டுமல்லாது தமது பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் வரையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் நாங்கள் போராடத்தயார் எனவும் தெரிவித்துள்ளனர்