வழிகாட்ட மறுக்கும் சமூகத்தினால் எதிர்காலத்தை வெல்ல முடியாத மாணவர்கள்

- றிசாத் ஏ காதர் 
 
மனித வாழ்வில் கற்றல் என்­பது நடத்­தையில் ஏற்­படும் நிரந்­த­ர­மான மாற்றம் என்றே உள­வி­ய­லா­ளர்கள் கரு­து­கின்­றனர். மனி­த­னாகப் பிறந்த ஒவ்­வொ­ரு­வனும் ஏதோ ஒரு­வ­கையில் வாழ்வின் அனைத்­துப்­பா­கங்­க­ளையும் கற்­கின்றான். கல்வி கற்­ப­தற்­காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகு­தியை செலவு செய்­கின்றான். இவ்­வாறு செல­வி­டப்­படும் காலங்கள் பொருத்­த­மா­ன­தாக அமைதல் வேண்டும்.

வெறு­மனே எல்­லோரும் கற்­கின்­றார்கள் என்­ப­துக்­காக கற்­பதில் எவ்­வித அர்த்­தங்­க­ளு­மில்லை. சடங்­குக்­காக அல்­லது சமூ­கத்­துக்­காக கற்கின்­ற­வற்றில் நடை­பெ­றப்­போ­வது எது­வு­மில்லை.

தான் கற்­கின்ற கல்வி முதலில் தனக்கு உத­வ­வேண்டும். அடுத்­த­தாக தான் வாழ்­கின்ற சமூ­கத்­துக்கு உத­வ­வேண்டும். இவை இரண்­டு­மில்­லாத கல்வி என்­பது சூன்­ய­மா­கவே கரு­தப்­படும்.

இன்­றைய சமூகச் சூழலில் சூன்­ய­மிக்க இளை­ஞர்­களை நிறை­யவே காணக்­கி­டைப்­பது கவ­லை­யான விட­யமே. அதற்­கான அடிப்­படை கார­ணங்­களை அறிந்து தீர்த்­து­வைப்­பது அரி­தா­கவே சமூ­க­மட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது.

தற்­ச­மயம் கல்விப் பொதுத் தரா­தர சாத­ராண தரப் பரீட்சை வெளி­வந்­துள்­ளது. பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்கள் தமக்கு பொருத்­த­மான துறையை தேர்வு செய்­வ­துவே முத­லா­வது அம்­ச­மாகும். தேர்வு செய்­வதில் எங்கு பிழை­வி­டப்­ப­டு­கின்­றதோ அங்­குதான் சூன்­ய­மிக்க இளைஞர் சமூகம் உரு­வா­கின்­றனர். இந்த நிலை­மைக்கு காரணம் வெறு­மனே மாண­வர்­களை மாத்­திரம் குற்றம் சுமத்த முடி­யாது என்­கின்­றனர் கல்­வி­ய­லா­ளர்கள். அதற்­கான பொறுப்­பினை பாட­சாலை தொடக்கம் குடும்பம் வரை கசப்­பு­ணர்­வு­க­ளுக்கு அப்பால் ஏற்­றுக்­கொண்­டே­யா­க வேண்டும் என்றும் குறிப்­பி­டு­கின்­றனர்.

கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப்­ப­ரீட்சை முடி­வுகள் வழ­மை­யான காலங்­களை விட இவ்­வ­ருடம் கணி­ச­மான பகு­தி­களில் அடை­வு­மட்­டங்கள் சிறப்­பாக அமை­யப்­பெற்­றி­ருக்­கின்­றன. அவற்­றுக்­காக பல்­வே­று­பட்ட தியா­கங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­ப­தனை பெறு­பே­றுகள் எடுத்­தி­யம்­பு­கின்­றன. இருந்­த­போ­திலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தேசிய நிலை­களில் கடந்­த­கா­லங்­களில் எவ்­வி­டத்தில் இருந்­ததோ அவ்­வி­டத்­தையே இம்­மு­றையும் தக்­க­வைத்­துள்­ளது என்­ப­துவே துன்பம் நிறைந்த செய்­தி­யாகும்.

கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தரப் பரீட்சை பெறு­பே­று­களின் பிற்­பாடு, உயர்­தர கற்­கை­க­ளுக்­கான பாடத் தெரி­வுகள் தொடர்­பாக ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விழிப்­பு­ணர்­வுகள், ஆலோ­ச­னைகள் என்­பது முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­மட்டில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டி­ய­தான அள­வே­யாகும்.

அதனால், இடை­நி­லைக்­கல்வி, உயர்­கல்வி பயிலும் மாண­வர்கள் எந்­தக்­கற்­கையை தெரிவு செய்­வது ? எவ்­வாறு கற்­பது என்­பதில் குழப்­ப­ம­டை­கின்­றனர். சில மாண­வர்கள் பிழை­யான பாடத் தெரிவின் மூலம் பரீட்­சையில் தோற்­றுப்­போய்­வி­டு­கின்­றனர்.

மேலும் கல்விக் கல்­லூ­ரிகள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பட்டம் பெற்று வெளி­யே­று­கின்­ற­வர்­களில் பலர் தொழிற்­று­றைக்கு பொருத்­த­மற்­ற­வர்­க­ளாக ஓரங்­கட்­டப்­ப­டு­கின்­றனர். அவ்­வா­றா­ன­வர்­க­ளி­டத்தில் உளத்­திறன் விருத்தி செய்­யப்­பட்­டி­ருப்­ப­தில்லை. அதனால் தனி­யான தீர்­மானம் எடுக்க முடி­யாமை, பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள முடி­யாமை, அச்சம், குழு­வாக பணி­யாற்ற முடி­யாமை, பல்­துறை ஆற்­ற­லின்மை, ஆங்­கில மொழித் தேர்ச்­சி­யின்மை, நவீன தொழி­நுட்­பங்­களை கையா­ள­மு­டி­யாமை போன்­ற­வற்­றுக்கு முகம்­கொ­டுக்­கின்­றனர். அதற்­கான தீர்­வாக பாட­சாலை, சமூக மட்­டங்­களில் இருந்து ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டுதல் வேண்டும்.

பொது­வாக சமூ­கத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்கள், பாட­சா­லைகள் மற்றும் பொது அமைப்­புக்கள், கழ­கங்கள் என்­பன இது விட­யத்தில் ஒருசில பிர­தே­சங்­களில் மந்­த­க­தியில் செயற்­ப­டு­வ­துடன் பெரும்­பா­லான பகு­தி­களில் செற்­பா­டுகள் அற்றே காணப்­ப­டு­வ­தனை சுட்­டிக்­காட்­டாமல் இருக்­க­மு­டி­யாது.

மாண­வர்­களின் கல்­விக்கு முக்­கி­யத்­துவம் அளித்து அம்­மா­ண­வர்­களை தொழில் ரீதி­யான தொழிற்­கல்­விக்கு தயார்­ப­டுத்­து­கின்ற நிலைமை இன்­னு­மில்­லா­ம­லுள்­ளது வருந்­தத்­தக்­கது என்­கின்­றனர் சமூ­கத்­தி­லுள்ள மூத்த கல்­வியி­ய­லா­ளர்கள்.

மேற்­கு­றிப்­பிட்ட நிறு­வ­னங்கள், அமைப்­புக்கள் மற்றும் கழ­கங்கள் சமூ­கத்தில் தேவை­யற்ற விட­யங்­களில் அதி­க­ம­திகம் கவனம் செலுத்­துகின்றனர். அல்­லது விளை­யாட்டு இதர நட­வ­டிக்­கைக்கு கவனம் செலுத்­து­கின்ற அள­வுக்கு கல்விச் செயற்­பா­டு­க­ளுக்­கான கவனம் இல்­லாமல் போய்­விட்­டது.

குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்­களின் பொது­வான சிந்­தனை உயர்­தரம் கற்றால் போதும். அதன் பின் பல்­க­லைக்­க­ழகம் செல்­லுதல், ஒரு அரச தொழில் பெற்­றுக்­கொள்ளல் என்­கின்ற வட்­டத்­துக்குள் நின்­று­வி­டு­கின்­றனர். பல்­க­லைக்­க­ழ­கத்தின் பின்னர் அர­சாங்கம் தங்­க­ளுக்­கான தொழிலை தேடி­வந்து தர­வேண்டும் என்­கின்ற எண்­ணப்­பாடும் மேலோங்­கி­யுள்­ளது. தொழில் ரீதி­யான கல்­வியை பெற்­றுக்­கொள்­வதற்­கான முயற்­சிகள் என்­பது பூச்­சி­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அறிவை பெற கற்­றுக்­கொள்ளல் என்­பது வேறு. பொரு­ளா­தா­ரத்தை ஈட்­டிக்­கொள்வதற்கான வழிகள்என்­பது வேறு. இந்த வித்­தி­யா­சங்­களை புரிந்­து­கொள்ள நம்மில் எத்­தனை பேர் ஆர்­வ­மா­க­வுள்ளோம். இதுவே இன்­றுள்ள மாண­வர்­க­ளுக்குத் தேவை­யான கருப்­பொருள்.
கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரத்தின் பின் உயர்­த­ரத்தில் தெரிவு செய்­கின்ற துறை­க­ளுக்கு வழி­காட்­டல்கள் மிக­முக்­கி­ய­மாகும்.

அதனை பாட­சாலை மட்டம் முதல் பெற்­றோர்கள் மிகச் சரி­யாக வழி­காட்ட வேண்டும். இவ்­வி­ய­டத்தில் மாண­வர்­களின் விருப்பு வெறுப்­புகள் பெறப்­பட்­டாலும் அம்­மு­டி­வுகள் பட்­டை­தீட்­டப்­படல் வேண்டும். இல்­லா­த­வி­டத்து விளை­யாட்டுப் பிள்­ளை­களின் மணல்­வீ­டா­கவே அவர்­களின் எதிர்­காலம் அமைந்­து­விடும்.

முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள மாண­வர்கள்; மத்­தியில் கல்­விக்­கான தாகம் வெகு­வாகக் குறைந்­து­கொண்டு செல்­கின்­றது. இதனை பல்­க­லைக்­க­ழங்கள், தொழிற்­கல்வி நிறு­வ­னங்­களின் புள்­ளி­வி­ப­ரங்கள் கோடிட்­டு­காட்­டு­கின்­றன. இந்த நிலை மாற்­றப்­படல் வேண்டும். கல்வி அல்­லது தொழிற்­றுறைக்­கல்வி தொடர்­பான விழிப்­பு­ணர்வு, உள­வ­ளத்­துணை செய­ல­மர்­வுகள் துறைசார் வல்­லு­நர்­களை கொண்டு நடாத்­தப்­ப­டுதல் வேண்டும். அச்­செ­ய­ல­மர்­வுகள் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு சமூக ரீதி­யான பங்­க­ளிப்­புக்கள் கணி­ச­மா­ன­தா­க­வி­ருத்தல் வேண்டும்.
மேற்படி ஆலோசனை, வழிகாட்டல்கள் தனியாக தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும்.

தனியாள் ஆளுமையை விருத்தி செய்யவும், நெருக்கடியான சூழலில் சரியான தீர்மனம் எடுக்கவும், வெளியேற்ற முடியாது என்ற நம்பிக்கையுடன் இருக்கும் எதிர்மறையுணர்வுகளை வெளியேற்ற முடியும். மேலும் எதிர்கால வாழ்வில் இலட்சியத்துடன் முன்னேறுவதற்கான வழிகள் இதன் மூலம் ஏற்படும் என்பது திண்ணம்.

இந்நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறாது போனால் மாணவர்கள்; தங்களுக்குப் பொருத்தமான தொழில்களை தெரிவு செய்துகொள்ள முடியாமல் போய்விடுவர்.

இதனால் சமூகத்தில் பல்வேறு நிலைகளிலும் சிக்கல்கள் தோன்றும். பிறழ்வு நடத்தை, சமூக முரண்பாடுகள் மற்றும் மன அழுத்தம் போன்றன நமது சமூக மாணவர்களை ஆட்கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை.