வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்ததால் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிப்பு.

NEWS

கிஷாந்தன் 

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் பன்மூர் தோட்டத்தில் 25.05.2017 அன்று இப்பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக பன்மூர் குளத்தின்  வெள்ளநீர் நான்கு வீடுகளுக்குள் 26.05.2017 அன்று அதிகாலை புகுந்ததன் காரணமாக நான்கு வீடுகளில் வாழ்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட 19 பேர் தற்காலிக்மாக அத்தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தற்போது அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

25.05.2017 அன்று மாலை முதல் மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் சுமார் 56 மில்லி மீற்றர் மழை வீழச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல குளங்களினதும் நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கனிசமான அளவில் உயர்ந்துள்ளது பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே வீடுகளில் வெள்ள நீர் பாய்ந்துள்ளது.

இதே  வேளை பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும் இது இந்த வேளையிலும் உடைந்து ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலை நிலை தொடருமானால் இக்குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைந்தால் பன்மூர் ,அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Tags
3/related/default