சவுதியில் பெட்ரோல் பங்குகளில் மொபைல் போன் உபயோகித்து பேசுவது, டெக்ஸ்ட் மெஸேச் அனுப்புவது, சிகரெட் பிடிப்பது, சிகரெட் துண்டை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் எஞ்சினை அணைக்காமல் இருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மீறுவோரின் குற்ற நடவடிக்கைக்கு ஏற்ப அபராதங்கள் விதிக்கப்படும்.
அதேபோல் பெட்ரோல் பங்க் நடத்துவோரும் பொதுமக்கள் பார்வையில் படும்படி மேற்காணும் தடைகளை விழிப்புணர்வு வாசகங்களாக எழுதி
பெட்ரோல் பங்குகளில் வைத்திருக்க வேண்டும். மீறும் பெட்ரோல் பங்குகள் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Saudi Gazette
