கண்டியில் அபாயா, பர்தா அணிந்து நடமாடிய சிங்கள இளைஞர் கைது

 
 
அபாயா மற்றும் பர்தா அணிந்து கொண்டு கண்டி குட்செட் பஸ் தரிப்­பி­டத்தில் சந்­தே­கத்­துக்­கி­ட­ மான முறையில் நின்று கொண்­டி­ருந்த ஆண் ஒருவர் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

உடல் முழு­வதும் மறைக்கும் வகையில் அபாயா மற்றும் பர்தா அணிந்து கொண்டு சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் பஸ் தரிப்­பி­டத்தில் நின்று அவ்­வி­டத்­துக்கு வந்து செல்லும் பய­ணி­களை நோட்­ட­மிட்டு வரு­வ­தனை இரு பொலிஸார் சுமார் 2 மணித்­தி­யா­லங்­க­ளாக அவ­தா­னித்து வந்­துள்­ளனர்.

பின்னர் கண்டி பொலிஸ் தலை­மை­ய­கத்தின் பெண் பொலிஸ் அதி­காரி ஒரு­வரை அவ்­வி­டத்­துக்கு வர­வ­ழைத்து சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் நின்று கொண்­டி­ருந்த நபரை சோத­னை­யிட முற்­பட்­ட­போது அவர்,  பய­ணித்துக் கொண்­டி­ருந்த பஸ்­ஸொன்றில் ஏறித் தப்­பிச்­செல்ல முயற்­சித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து பஸ்ஸை வழி­ம­றித்து  பெண் என கரு­தப்­பட்ட நபரை பொலிஸ்­நி­லை­யத்­துக்கு அழைத்­து­வந்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி பர்­தாவை அகற்றிப் பார்த்­த­போது குறித்த சந்­தே­க­நபர் ஆண் என தெரி­ய­வந்­துள்­ளது.

விசா­ர­ணை­க­ளின்­போது, சந்­தேக நபர் தெரி­வித்­த­தா­வது, தனது மனைவி கம்­ப­ளை­யி­லுள்ள தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்றி வரு­வ­தா­கவும், அவர் பிறி­தொரு நப­ருடன் தொடர்பு வைத்­துள்ளார் என்ற சந்­தே­கத்தில் அவ­ரது நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணித்து அவரை கையும்­ மெய்­யு­மாக பிடிப்­ப­தற்­கா­கவே இவ்­வாறு பர்­தாவால் முகத்தை மூடிக்­கொண்டு மாறு­வே­டத்தில் வந்­த­தாக பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

கைது செய்­யப்­பட்ட நபர் கம்­பளை, மயி­ல­பிட்­டிய பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ராவார். விசா­ர­ணை­களின் பின்னர் சந்­தே­க­ந­பரின் மனைவி பொலிஸ் நிலை­யத்­துக்கு வரவ ழைக்­கப்­பட்டு அவ­ரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் உபாலி நாரங்பணாவ தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.