ARA.Fareel
பொலன்னறுவை ஓனேகம பகுதிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த குருமாரும் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் மாட்டுத் தொழுவங்கள் மற்றும் கொட்டில்களைக் கழற்றி எறிந்ததுடன் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அவதூறாகப் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பிக்குகள் முஸ்லிம்கள் ஜலகெலும்மின்ன வன பாதுகாப்பு பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டியதுடன் அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
இச் சம்பவங்களின் போது அவ்விடத்திற்கு பொலிஸாரும் சமுகமளித்திருந்தனர்.
இதேவேளை, பௌத்த சைத்திய நிர்மாணத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களை பயன்படுத்தி முஸ்லிம்கள் மாட்டுத் தொழுவத்தை நிர்மாணித்துள்ளதாக பொதுபலசேனாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சோமாவதி வன பாதுகாப்பு எல்லையில் ஜலகெலும்மின்ன வன பாதுகாப்பு பிரதேசம் அமைந்துள்ளதாகவும், இப்பகுதியில் முஸ்லிம்கள் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் இருந்த சுமார் 18 பௌத்த சைத்தியங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் பொது பல சேனாவின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் சுமார் 200 வருடங்களுக்கும் மேற்பட்ட மருத மரங்களை வெட்டி காடுகளை அழித்துள்ளதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகளில் பொதுபலசேனா அமைப்பு, சிங்கள ராவய, சிங்கலே அபி அமைப்பு என்பனவற்றின் குருமார்கள் கலந்து கொண்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் பீதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.அன்ஸார் நேற்று மாலை ஓனேகமைக்குச் சென்று மக்களைச் சந்தித்து விபரங்களைத் திரட்டியுள்ளதுடன் இது தொடர்பில் லங்காபுர பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
ஜாதிகபல சேனாவின் செயலாளர் வட்டரக்க விஜிததேரர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் முன்பு குறிப்பிட்டது போன்று உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக செயற்படுவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவங்களின் போது அவ்விடத்திற்கு பொலிஸாரும் சமுகமளித்திருந்தனர்.
இதேவேளை, பௌத்த சைத்திய நிர்மாணத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களை பயன்படுத்தி முஸ்லிம்கள் மாட்டுத் தொழுவத்தை நிர்மாணித்துள்ளதாக பொதுபலசேனாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சோமாவதி வன பாதுகாப்பு எல்லையில் ஜலகெலும்மின்ன வன பாதுகாப்பு பிரதேசம் அமைந்துள்ளதாகவும், இப்பகுதியில் முஸ்லிம்கள் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் இருந்த சுமார் 18 பௌத்த சைத்தியங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும் பொது பல சேனாவின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் சுமார் 200 வருடங்களுக்கும் மேற்பட்ட மருத மரங்களை வெட்டி காடுகளை அழித்துள்ளதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகளில் பொதுபலசேனா அமைப்பு, சிங்கள ராவய, சிங்கலே அபி அமைப்பு என்பனவற்றின் குருமார்கள் கலந்து கொண்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் பீதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.அன்ஸார் நேற்று மாலை ஓனேகமைக்குச் சென்று மக்களைச் சந்தித்து விபரங்களைத் திரட்டியுள்ளதுடன் இது தொடர்பில் லங்காபுர பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
ஜாதிகபல சேனாவின் செயலாளர் வட்டரக்க விஜிததேரர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் முன்பு குறிப்பிட்டது போன்று உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக செயற்படுவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
