திருகோணமலை – கிண்ணியா கல்வி வலயத்தின் 15 மாணவர்களுக்கு இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேவையான ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் இதுதொடர்பில் கிண்ணியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் அதிபர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட பல்வேறு குறைப்பாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
