குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் ஸபீர் அவர்களினதும் பிரதேசசபை வேலைதிட்டங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (11) குளியாப்பிடிய பிரதேசசபையில் நடைபெற்றது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின்கீழ் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.என்.நஸீர் (MA) அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் தவிசாளர் விஜயசிரி ஏகநாயக,கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த, மாகாண சபை உறுப்பினர்களான டீபி.ஹேரத்,ரிகிரி அதிகாரி,சமன் பிரிய ஹேரத்,குருநாகல் நகர சபை மேயர் துசார,பிரதேச சபை செயலாளர்அப்துல் சத்தார்,முன்னால் பிரதேச சபை தவிசாலர்களான கடவெலகெதர,நரஸிங்க,உற்பட அனைத்து ஆளுங்கட்சி பிரதேச சபை உருப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய மத்திய குழு உறுப்பினர்கள்,சர்வமதத்தலைவர் கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

