Headlines
Loading...
5 மில்லியன் நிதியில் மன்னார் மூர்வீதி கிராமத்திற்கு பாரிய அபிவிருத்தி பணிகள்!

5 மில்லியன் நிதியில் மன்னார் மூர்வீதி கிராமத்திற்கு பாரிய அபிவிருத்தி பணிகள்!

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் கர்னி அவர்களது தலைமையில் இடம்பெற்றது. 

5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டடம் , மையவாடிக்கான உள்ளக பாதை மற்றும் மின் விளக்கு பொறுத்தல் , கிறவள் பாதை போன்ற திட்டங்கள் ஆரம்பிக்கும் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் முனவ்வர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மன்னார் நகரசபை உறுப்பினர்களான நகுசீன் , டிலானி குரூஸ் மற்றும் இணைப்பாளர் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments: