குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது



கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 378 பேர் இன்று (13) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

24 வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப்பெற்றவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,031ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 4,644 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்