ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய தனது ஒரு ஏக்கர் நிலத்தை வக்ப் செய்த முசலி நபர்




கொரோனா தொற்று மூலம் மரணமாகும் முஸ்லிம் ஜனாஸாக்களை முசலியில் அடக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சிலாவத்துறை டவுன் மஸ்ஜிதில், முசலி பிரதேச அனைத்து மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் முசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச பொதுச் சுகாதார ஆய்வாளர், மற்றும் முசலி உலமாக்கள் ஓன்றியம் மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


கொரோனாவால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கம் செய்ய வேப்பங்குளத்தை சேர்ந்த ஒரு சகோதரர் தனது ஒரு ஏக்கர் காணியை இப்பணிக்காக வக்பு செய்துள்ளார்.

ஜனாசா நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவுடன், குறித்த இடத்தில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முடியும்❤

அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வாறாக!

இப்பணி சிறந்த முறையில் நடந்தேறப் பிரார்த்திப்போமாக!

கருத்துரையிடுக

0 கருத்துகள்