கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறு பேறு களின் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங் களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப் படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட் படுத்தாமல் அது நிராகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன் னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின்கீழ் தோற்றிய 42 மாணவர்களால் குறி த்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.
